கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து பாங்காக்கிற்கு இன்று அதிகாலை 1.09 மணியளவில் போயிங்-737 என்ற விமானம் 6 பணியாளர்கள் மற்றும் 178 பயணிகளுடன் புறப்பட்டது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் விமானத்தின் இடதுபக்க இன்ஜினின் பிளேடு உடைந்திருப்பதை விமானி கவனித்தார். அதையடுத்து அவர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தை உடனடியாக தொடர்பு கொண்டார். அவர்களின் ஆலோசனையின்படி, கொல்கத்தா விமான நிலையத்தில் தீயணைப்பு இயந்திரங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் அவசரக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
