இஸ்தான்புல்: துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். அவர்களில் துருக்கியில் மட்டும் 44,000 பேர் பலியாகினர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், முக்கிய நகரமான இஸ்தான்புல்லில் கொன்யாஸ்போர் - பெசிக்டாஸ் உள்ளூர் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. போட்டிகளுக்கு மத்தியில் ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்த ரசிகர்கள், துருக்கி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ‘துருக்கி அரசே ராஜினாமா செய்; 20 ஆண்டுகளாக பொய்களை பேசி வருகின்றீர்கள்; மக்களை ஏமாற்றுகின்றீர்கள்.