கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே பசுமை மற்றும் தூய்மை குறித்து நடைபெற்ற தூய்மை பணியில் பள்ளி மாணவ, மாணவியர் சிலம்பம் சுற்றியபடியே பங்கேற்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாநில அளவிலான சிலம்பம், கராத்தே மற்றும் யோகா போட்டிகள் நடைபெற்றன. இதில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.