காரைக்கால்: காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா 200ம் ஆண்டு கந்தூரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. கந்தூரி விழாவையொட்டி, மாவட்ட நிர்வாகம் மற்றும் வக்பு நிர்வாக சபை மூலம் பல்வேறு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே கந்தூரி விழா நெருங்கும் நிலையில், சந்தனக்கூடு கந்தூரி ஊர்வலம் செல்லும் தெருக்களில் சாலைகள் பள்ளமும் மேடாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.