ஆஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தில் காலிஸ்தான் கொடி

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தில் காலிஸ்தான் தீவிரவாதிகளின் கொடி ஏற்றப்பட்டது. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இந்திய துணை தூதரகம் உள்ளது. கடந்த 21ம் தேதி இரவு துணை தூதரகத்தில் உள்ள கொடி கம்பத்தில் காலிஸ்தான் கொடியை அதன் ஆதரவாளர்கள் ஏற்றி வைத்துள்ளனர். 22ம் தேதி இந்தியாவின் கவுரவ துணை தூதர் அர்ச்சனா சிங் வந்தபோது காலிஸ்தான் கொடி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து குயின்ஸ்லேன்ட் காவல்நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அந்த கொடியை அகற்றினார்கள். இங்குள்ள 3 இந்து கோயில்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியதை தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Related Stories: