மதுரை: ஏழைகள் வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் நிதியில் முறைகேடுகளை தடுக்க முதன்மை செயலாளர் புதிய நடைமுறைகளை கொண்டுவரலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் இறந்தவர் பெயரில் நிதி ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.