சென்னை: எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தை நாட அதிமுக முடிவு செய்துள்ளது. அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக இடைக்கால பொதுக்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்த அதிமுக பொதுக்குழு செல்லும் என தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு அங்கீகாரம் வழங்ககோரி அதிமுக தரப்பில் தேர்தல் ஆணையத்தை நாட முடிவு செய்யப்பட்டுள்ளது.