கோத்தகிரி: கோத்தகிரி அருகே உள்ள அரவேனு பெரியார் நகர் பகுதியில் குடியிருப்பு அருகே உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி கேமரா பதிவு பொதுமக்களை அச்சமடைய செய்துள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி சிறுத்தை, கரடி, காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியில் உலா வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அடிக்கடி கரடி மட்டும் உலா வரும் அரவேனு அருகே உள்ள பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை நேரத்தில் சிறுத்தை ஒன்று உலா வந்துள்ளது.