ராகுல் வலுவாக திரும்பி வருவார்: முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங் ட்விட்

முப்பை: இந்திய டெஸ்ட்கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல் தொடர்ந்து சொதப்பி வருவதால் அவருக்கு கல்தா கொடுத்துவிட்டு சுப்மான்கில்லுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. அவரிடம்  துணை கேப்டன் பதவி இருப்பதால் தான் , அவர் இடத்தை வைக்க வைத்துள்ளார்,அதனை பறிக்க வேண்டும் என மாஜி வீரர்கள் சாடி உள்ளனர்.

இந்நிலையில் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங் இதுபற்றி டுவிட்டர் பதிவில், கே.எல்.ராகுலை விமர்சிப்பதை விட்டுவிடலாமா நண்பர்களே?, அவர் எந்த குற்றமும் செய்யவில்லை. அவர் இன்னும் ஒரு சிறந்த வீரர். அவர் வலுவாக திரும்பி வருவார். சர்வதேச கிரிக்கெட்டில் நாம் அனைவரும் இதுபோன்ற மோசமான காலட்டத்தை கடந்து செல்கிறோம். இதில் முதல் நபரும், கடைசிநபரும் அல்ல. எனவே அவர் எங்கள் சொந்த வீரர் என்ற உண்மையை மதிக்கவும், நம்பிக்கையும் கொள்ளவும், என தெரிவித்துள்ளார்.

Related Stories: