டெல்லி : கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில், நீதிமன்ற அவமதிப்பு விசாரணையை, சுவாதி எதிர்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆயுள் தண்டனை விதித்ததை அடுத்து, அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு விசாரணையில் சுவாதி ஆஜரான போது, அவர் பிறழ் சாட்சியாக தெரிவதால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு தடைக் கோரி சுவாதியின் கணவர் ரஞ்சித் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.