நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மறைவுக்கு: ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் இரங்கல்

சென்னை: நகைச்சுவை நடிகர் மயிலஸ்வாமி மறைவுக்கு ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் இறங்கல் தெரிவித்துள்ளார். நகைச்சுவை நடிகர் மயில்சாமி என்று அதிகாலை மரணம் அடைந்துள்ளார். மயிலசாமியின் திடீர் மறைவு அவரது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகர் திரு. மயில்சாமி அவர்கள் மறைந்தார் என்ற துயர்மிகு செய்தியறிந்து வருந்தினேன். பல குரல்களில் நகைச்சுவையாகப் பேசும் ஆற்றல் படைத்த அவர், தன்னுடைய ஒலிநாடாக்கள் வழியாக தமிழ்நாடு முழுவதும் அறிமுகமானவர்.

மயிலஸ்வாமியின் மறைவுக்கு திரையுலகத்தினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மயிலசாமி மறைவுக்கு ஜார்கண்ட் மாநில சி.பி.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். சி.பி.ராதாகிருஷ்ணன் மயிலசாமியின் மறைவுக்கு பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

திரை உலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர்க்கும் திரையுலகக் கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

தமிழ் நகைச்சுவை நடிகர் மயிலசாமியின் திடீர் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடுபத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என அந்த பதிவில் தெரிவித்துள்ளர்.

திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த நடிகர் மயில்சாமியின் இழப்பு ஈடு செய்ய முடியாதது எனக் கூறியுள்ளார்.காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் இல்லங்களில் ஒருவராகவே பார்க்கப்படுகிற அளவுக்கு அன்பைப் பெற்றவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பாராட்டைப் பெற்றவர். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் தன்னுடைய கருத்துகளை ஆழமாகப் பதிவு செய்யக்கூடியவர்.

Related Stories: