வாஷிங்டன்: உலக வெப்பமயமாதல் விபரீதத்தால் தொடர்ந்து 2வது ஆண்டாக அண்டார்டிகா கடல் பனியின் அளவு கடும் சரிவை கண்டுள்ளது. அண்டார்டிகாவின் கடல் பனி அளவு குறித்த அறிக்கையை தேசிய பனி மற்றும் பனிக்கட்டி தகவல் மையம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான அறிக்கை கடந்த 13ம் தேதி வரை கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி, அண்டார்டிகா கடல் பனி அளவு 1.91 மில்லியன் சதுர கிலோமீட்டராக குறிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவாகும்.