பாட்னா: இந்திய ஒற்றுமை யாத்திரை மூலமாக கிடைத்த வேகத்தை பயன்படுத்தி கூட்டணியை உருவாக்கினால் அடுத்த மக்களவை தேர்தலில் பா.ஜவை 100 தொகுதிக்குள் கட்டுப்படுத்த முடியும் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்து உள்ளார். பாட்னாவில் நடந்த விழாவில் முதல்வர் நிதிஷ்குமார் கலந்து கொண்டார். விழாவில் பேசிய முதல்வர் நிதிஷ்குமார்,” இந்திய ஒற்றுமை யாத்திரை நன்றாக நடந்தது என்பதை காங்கிரசில் உள்ள நண்பர்களுக்கு கூற விரும்புகிறேன்.