காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் திரவுபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகள நிகழ்ச்சி விமர்சியாக நடைபெற்றது. காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி மற்றும் திரவுபதி அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் மகாபாரத திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கடந்த மாதம் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் மகாபாரத திருவிழா தொடங்கியது. தினமும் சொற்பொழிவு, நாடகங்கள் நடைபெற்று வந்த நிலையில் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகள நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.