ஐதராபாத்: ரசிகர்களை நடிகர் பிரபாஸ் சந்தித்து பேசினார். பாகுபலி 2 படத்துக்கு பிறகு பான் இந்தியா ஸ்டாராக பிரபாஸ் மாறிவிட்டார். தொடர்ந்து சாஹோ, ராதே ஷியாம் ஆகிய பான் இந்தியா படங்களில் நடித்த அவர், இப்போது சலார் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோனுடன் காதல் கிசு கிசுவில் அவர் சிக்கினார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் என்று தகவல் பரவியது. ஆனால் இதை பிரபாஸ் மறுத்துவிட்டார்.ராதே ஷியாம் படத்தின்போது, ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்கான போட்டி நடத்தப்பட்டது.