தமிழகம் மதுரையில் 7 தளங்கள் கொண்ட கலைஞர் நினைவு நூலகம் ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும்!: அமைச்சர் ஏ.வ.வேலு உறுதி..!! Jun 26, 2021 மதுரை அமைச்சர் ஏ வி. வேலு AV வேலு தின மலர் மதுரை: மதுரையில் 7 தளங்கள் கொண்ட கலைஞர் நினைவு நூலகம் ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு உறுதிபட தெரிவித்துள்ளார். மதுரையில் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படவுள்ளது. இந்த கட்டிடம் கட்டுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட 6 இடங்களை அமைச்சர்கள் ஏ.வ.வேலு, பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஏ.வ.வேலு, மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட 6 இடங்களை ஆய்வு செய்தோம். இந்த நூலகம் அமையவுள்ள இடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெகு விரைவில் அறிவிப்பார் என்று கூறினார். மதுரையில் 7 தளங்களோடு கூடிய கலைஞர் நூலகம் 24 பகுதிகளாக பிரிக்கப்பட்டு பொதுமக்கள் தனித்தனியே நூல்கள் படிப்பதற்கு ஏற்றவகையில் அமைக்கப்படும் என்று அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்தார். மேலும் மதுரையில் நூலகம் அமைவது மிகவும் சாலச்சிறந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். … The post மதுரையில் 7 தளங்கள் கொண்ட கலைஞர் நினைவு நூலகம் ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும்!: அமைச்சர் ஏ.வ.வேலு உறுதி..!! appeared first on Dinakaran.
வெயிலின் தாக்கத்தால் மின்சார தேவை அதிகரித்துள்ள நிலையில் டான்ஜெட்கோ தலைவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.. வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருப்போம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி!!
வெயிலின் தாக்கத்தால் மின்சார தேவை அதிகரித்துள்ள நிலையில் டான்ஜெட்கோ தலைவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
வரி நிர்வாகத்தில் எளிய நடைமுறையின் பயனாக கூடுதலாக ரூ.40,399.51 கோடி வருவாய் வசூல் செய்யப்பட்டு சாதனை: தமிழ்நாடு அரசு தகவல்
சிவகாசியில் குழந்தையை கொன்று ஆசிரியர் தம்பதி உள்பட 4 பேர் தற்கொலை: ஆசிரியர் அளித்த வாக்குமூல வீடியோ வெளியானதால் பரபரப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் வணிகவரித்துறை முன்னணி வகிக்கிறது : தமிழ்நாடு அரசு பெருமிதம்
வெற்றியின் முகட்டில் நிக்கிறது இந்தியா கூட்டணி.. பாஜக உருவாக்கிய போலி பிம்பத்தை தகர்த்துவிட்டோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!!
திருவள்ளூர் காக்களூர் சிப்காட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4-ஆக உயர்வு
தாய்ப்பால் விற்பனை.. 18 குழுக்கள் அமைத்து மாநிலம் முழுவதும் கண்காணிப்பு தீவிரம்: உணவு பாதுகாப்புத்துறை தகவல்