சென்னை: தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் வெளியிட்ட அறிக்கை: ‘திராவிட மாடல் அரசு’ என்ற லட்சியத்தை தமிழக கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சேர்க்க, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் தமிழகத்திலுள்ள, அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்துக் கல்லூரிகளின் மாணவர்களுக்காக தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச்சு போட்டிகளை கடந்த ஆண்டைபோலவே இந்த ஆண்டிலும் நடத்த இருக்கிறது. போட்டிகள் மாவட்ட அளவில் தமிழில் 15 தலைப்பிலும் ஆங்கிலத்தில் 15 தலைப்பிலும் தனித்தனியாக நடத்தப்படும். மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் கலந்துகொள்ளும் மாநில அளவிலான போட்டி இறுதியில் நடத்தப்படும். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழுக்கும், ஆங்கிலத்திற்கும் தனித்தனியாக பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.