துருக்கி: துருக்கியில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டு 62 மணி நேரத்திற்கு பிறகு பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். காசியன்டெப் என்ற இடத்தில் கட்டிட குவியல்களை அப்புறப்படுத்தியபோது பெண் உயிருக்கு போராடியது தெரியவந்தது. இதையடுத்து மீட்பு குழுவினர் அவரை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துருக்கியின் ஹாட்டி மாகாணத்தில் எங்கு பார்த்தாலும் சாலைகளில் பள்ளம் காணப்படுகிறது. வான் வழி காட்சியை பார்க்கும் போது இதனை சரி செய்ய பல வருடங்கள் ஆகும் என்பது தெளிவாகிறது.