சங்ககிரி: சேலம் மாவட்டம், இடைப்பாடி தாலுகா கோரணம்பட்டியை சேர்ந்தவர் வசந்த் (23). வில்வித்தை வீரரான இவர், மாநில அளவில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். இவர் இடைப்பாடி அடுத்த வெள்ளாண்டிவலசு என்ற இடத்தில் மெடிக்கல் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு மெடிக்கல் கடைக்கு சென்றவர், இரவு 10 மணிக்கு மேல் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை.