ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் அதிமுக வேட்பாளர்கள் உட்பட 80 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 31ம் தேதி தொடங்கி நேற்று முடிவுக்கு வந்தது. காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி உட்பட மொத்தம் 96 வேட்புமனு தாக்கல் செய்தனர். மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. பிரதான கட்சிகளான திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.