டெல்லி : ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க ஒன்றிய அரசு சட்டம் கொண்டு வருவது சரியாக இருக்கும் என்று ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ தெரிவித்துள்ளார். மாநில எல்லைகளை கடந்த பிரச்சனை என்பதால் ஒன்றிய அரசு சட்டம் இயற்றுவது சரியாக இருக்கும் என்றும் நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில் அரசு சட்டம் கொண்டு வரும் எனவும் மக்களவையில் அவர் பேசியுள்ளார்.