துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 8,000-ஐ தாண்டியது: துருக்கியில் 3 மாத காலத்திற்கு அவசர நிலை பிரகடனம்..!!

துருக்கி: துருக்கி மற்றும் சிரியாவில் பூகம்பத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், 3 மாத காலத்திற்கு அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8ஆக பதிவான இந்த பூகம்பத்தால், ஹத்தே, அடியமான், அங்காரா, சிவரன் உள்ளிட்ட நகரங்களில் கட்டடங்கள் தரைமட்டமாகின. சக்திவாய்ந்த பூகம்பத்தை  தொடர்ந்து 7.5 மற்றும் 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கங்களும், 150க்கும் மேற்பட்ட முறை நில அதிர்வுகளும் ஏற்பட்டது. இதனால் துருக்கியில் சுமார் 6 ஆயிரம் பேர், சிரியாவில் சுமார் 2 ஆயிரம் பேர் என மொத்தமாக 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இரு நாடுகளிலும், பல நகரங்கள் சிதைந்து கான்கிரீட் குப்பைகளாக காட்சியளிக்கின்றன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரக்கூடிய நிலையில், மழை மற்றும் கடும் குளிர் மீட்புப்பணிக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இதுவரை 10 ஆயிரதத்திற்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே நிலநடுக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடுத்த 3 மாதங்களுக்கு அவசர நிலையை அதிபர் எர்டோகன் பிறப்பித்துள்ளார்.

Related Stories: