கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கால்நடை பண்ணை அருகே முகாமிட்டிருந்த 5 காட்டு யானைகள் விரட்டியடிக்கப்பட்டன. ஓசூர் மத்திகிரி பகுதியில் அரசு கால்நடை பண்ணை உள்ளது. இங்குள்ள மூங்கில் காட்டில் ஒற்றை யானை திரிவதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை எச்சரித்திருந்தது. இருப்பினும் வனத்துறையினர் யானையை கண்காணிக்கும் பணியை தீவிரப்படுத்தியபோது அங்கு 5 காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன. இந்நிலையில் காலையில் அவற்றை ஓசூர் தளிச்சாலை வழியாக யானைக்கால் பகுதிக்கு வனத்துறையினர் விரட்டினர். மேலும் யானைகளின் நடமாட்டம் காணப்படுவதால் மத்திகிரி, குருபட்டி, கூனப்பள்ளி, அந்திவாடி உள்ளிட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கப்பட்டுள்ளனர்.