புதுடெல்லி: விமானத்தில் பயணிக்க தடை விதிக்கும் பயணத் தடைப் பட்டியலில் கடந்த ஆண்டு 63 பேரை விமானப் போக்குவரத்து ஆணையம் சோ்த்திருப்பதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் வி.கே.சிங் அளித்த பதிலில், ‘விமானப் போக்குவரத்து ஆணையம் மேற்கொண்ட ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பாக, விமானத்தில் பயணிக்க தடை விதிக்கும் பயணத் தடைப் பட்டியலில் கடந்த 2017ம் ஆண்டில் இருந்து இதுவரை மொத்தம் 143 பேர் இணைக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு மட்டும் 63 பேர் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஆணையம் சார்பில் வகுக்கப்பட்டுள்ள விமானப் போக்குவரத்து விதிகளின் (சி.ஏ.ஆர்) கீழ் விமான நிறுவனங்களில் உள்குழுக்கள் அமைக்கப்பட்டன.