டெல்லி: அதானி குழுமம் மீதான குற்றசாட்டுகள் குறித்து விவாதம் நடத்த அனுமதி கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பியதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளை 4வது நாளாக இன்றும் ஒத்திவைக்க நேரிட்டது. அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை முறைகேடு புகார் குறித்து விவாதம் நடத்தக்கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற அவைகளின் தலைவர்களுக்கு நோட்டீஸ் அளித்திருந்தனர். ஆனால் காலை மக்களவை கூடியதும் அதானி விவகாரம் குறித்து விவாதம் நடத்தக்கோரிய எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை சபாநாயகர் ஓம் பிர்லா நிராகரித்துவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பியதால் மக்களவையில் குழப்பம் ஏற்பட்டது.