தஞ்சாவூர்: தஞ்சாவூரில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி: பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க அரசு அறிவித்துள்ளது போதுமானதாக இருக்காது. இதை அரசு மறுபரிசீலனை செய்து ரூ.35 ஆயிரம் கொடுக்க வேண்டும். அதானி, நாட்டிற்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இது தேசத்திற்கு பெரும் இழப்பாக உள்ளது. இதற்கு பிரதமர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இந்த பிரச்னையை எதிர்க்கட்சிகள் பேசுவதால் அவையை ஒத்திவைக்கக்கூடிய முடிவை பாஜ அரசு எடுத்து வருகிறது. இது மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய செயலாகும். அதானி பிரச்னையை இரு அவைகளிலும் பேசுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.