பார்மர்: மத உணர்வுகளை புண்படுத்தி, இரு பிரிவினருக்கிடையே பகைமையை வளர்க்கும் விதமாக பேசியதாக எழுந்த புகாரின் பேரில் யோகாகுரு பாபா ராம்தேவ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் மாநிலம் பார்மரில் கடந்த பிப்ரவரி 2ம் தேதி நடந்த மடாதிபதிகள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய யோகாகுரு பாபாராம் தேவ், “இந்து மதம் தன்னை பின்பற்றுபவர்களுக்கு நல்லதை மட்டுமே கற்று தருகிறது. ஆனால், இஸ்லாம் மதம் தீவிரவாத செயல்களை ஊக்குவிக்கிறது.