லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தின் தஸ்னா பகுதியில் உள்ள சாலையில் கடந்த 3ம் தேதி 11ம் வகுப்பு மாணவன் ஆஷிஷ் (17), தனது நண்பனுடன் பைக்கில் சென்றான். சாலையின் எதிர் திசையில் ஆஷிஷ் பைக் ஓட்டி சென்றபோது, எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் ஆஷிஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். அவனுடன் வந்த சிறுவன் படுகாயமடைந்தான். தகவலறிந்து காசியாபாத் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.