தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அலங்கியம் காந்தி நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் சுரேஷ் (19), தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர். அலங்கியத்தில் உள்ள கனரா வங்கி கிளையில், கொள்ளையடிக்க திட்டமிட்ட சுரேஷ், கருப்பு நிற பர்தா அணிந்து கத்தி, கை துப்பாக்கி மற்றும் டைம்பாமுடன் நேற்று வங்கிக்குள் நுழைந்தார். பின்னர் வங்கி மேலாளரின் மீது கத்தியை வைத்து மிரட்டி பாம் வெடிக்க வைப்பதாக கூறியும், துப்பாக்கியை காட்டி சுட்டு விடுவதாக கூறியும் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
அப்போது, வாடிக்கையாளர் ஒருவர் சுரேஷின் தலையில் தாக்கினார்.