ஷதோல்: மத்தியபிரதேச மாநிலம் ஷதோல் மாவட்டத்தில், உடலில் 50 சூடு வைக்கப்பட்டதால் இரண்டரை மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பழங்குடியினர் அதிகம் வசிக்கும் ஷதோல் மாவட்டம் சிங்பூர் பகுதியில் உள்ள கத்தோடியாவில் வசிக்கும் பெண், உடல்நலம் பாதிக்கப்பட்ட தன் இரண்டரை மாதம் பெண் குழந்தையை உள்ளூர் வைத்தியரிடம் அழைத்து சென்றுள்ளார். அந்த வைத்தியர் குழந்தையை குணப்படுத்த குழந்தையின் உடலில் 50 சூடு வைத்ததாக கூறப்படுகிறது.