ஈரோடு: ஈரோடு மாவட்டம் நசியனூர் சாலையில் உள்ள வணிகர் சங்க கட்டிடத்தில் அனைத்து தொழில் வணிகர் சங்கங்களின் சார்பில், வேட்பாளர் விவாத மேடை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் கே.என்.நேரு, ஏ.வ.வேலு, பெரியகருப்பன், முத்துசாமி, செந்தில் பாலாஜி, த.மோ.அன்பரசன், மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது: விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கை ஏற்று மின் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, விசைத்தறியாளர்களுக்கு வழங்கப்படும் 750 யூனிட் இலவச மின்சாரத்தை, 1000 யூனிட் ஆகவும்,