சென்னை: அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அறிவிக்கப்பட்ட தென்னரசுவை அதிமுக வேட்பாளராக அறிவித்து அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் படிவம் வெளியிட்டார். பொதுக்குழு மூலம் அதிமுக வேட்பாளரை முடிவு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நடவடிக்கை மேற்கொண்டார். பிரமாண பத்திரத்தில் வேட்பாளருக்கு ஒப்புதல் அளிக்க பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுக்குழு உறுப்பினர்கள் நோட்டரி பப்ளிக் முன்னிலையில் தங்களது விருப்பத்தை பதிவு செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.