பொகாரோ: ஜார்கண்டில் போலீஸ் அதிகாரி எனக்கூறி 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த அஸ்லம் கான் என்பவர், 7வது முறையாக மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற போது கைது செய்யப்பட்டார். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த அஸ்லம் கான் (50) என்பவர், தன்பா அடுத்த பூலியில் வசித்து வருகிறார். இவர் போலீஸ் அதிகாரி போல் நடித்து பல பெண்களை ஏமாற்றி உள்ளார். அவர்களில் 6 பேரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். 7வது முறையாக மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற போலீசில் சிக்கிக் கொண்டார். இதுகுறித்து நகர போலீஸ் டி.எஸ்.பி குல்தீப் குமார் கூறுகையில், ‘தன்னை போலீஸ் அதிகாரி எனக் கூறி, வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த 6 பெண்களை ஏமாற்றி அஸ்லம் கான் திருமணம் செய்துள்ளார். புதியதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட பின்னர், அவருடன் கொஞ்ச நாட்கள் வாழ்ந்துவிட்டு பின்னர் அவரை கழற்றிவிடுவார்.