பழநி: பழநி மலைக்கோயிலில் நடந்த உண்டியல் காணிக்கையில் ரொக்கமாக ரூ.1.86 கோடி கிடைத்தது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கும்பாபிஷேகத்திற்கு பிறகான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மலைக்கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் நேற்று துவங்கியது.
வங்கி ஊழியர்கள், கோயில் ஊழியர்கள், கல்லூரி மாணவ- மாணவிகள், தன்னார்வலர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.