தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத்தேர் புறப்பாடு இன்று முதல் 6-ம் தேதி வரை நிறுத்தம்

திண்டுக்கல்: தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத்தேர் புறப்பாடு இன்று முதல் 6-ம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் 5 நாட்களுக்கு தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பழனி முருகன் கோயிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடமுழுக்கு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதையடுத்து தைப்பூச திருவிழா பணிகள் நடைபெற்று வருவதால் பழனி முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பழனி முருகன் கோவிலில் கடந்த 29ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் 10 நாட்கள் விழா நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தைப்பூச திருநாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத்தேர் புறப்பாடு இன்று முதல் 6-ம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் 5 நாட்களுக்கு தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories: