அம்பத்தூர்: அயனாவரம் சிவலிங்கா ஆச்சாரி தெருவைச் சேர்ந்தவர் கண்ணையன் (62). இவருக்கு அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டில் சொந்தமாக 4,800 சதுர அடி காலி மனை உள்ளது. இந்த இடத்தின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த இடத்தை விற்பதற்காக அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு முதியவர் ஒருவர் வந்தார். அவர், தன்னுடைய பெயர் கண்ணையன் என்று கூறி சார் பதிவாளரிடம் அடையாள அட்டைகளை சமர்ப்பித்துள்ளார். அதை சரி பார்த்தபோது போலி என தெரியவந்தது. அதை தொடர்ந்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.