சிதம்பரம்: கடலூர் மாவட்டம் உச்சிமேடு பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் ஜெயக்குமார்(28). இவர் கடலூர் மாவட்ட நீதித்துறையில் தொழில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சிதம்பரத்தை சேர்ந்த மகாலட்சுமிக்கும் நேற்று காலை சிதம்பரம் கமலீஸ்வரன் கோயில் தெருவில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக நேற்று முன்தினம் மாலை மணமக்களின் உற்றார், உறவினர்கள் மண்டபத்துக்கு வந்திருந்தனர். மாலை 7 மணிக்கு அருகில் உள்ள விநாயகர் கோயிலில் இருந்து வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மணமக்கள் ஊர்வலமாக வாகனத்தில் வந்தனர். இது இரவு 9 மணிவரை நடைபெற்றது.