விழுப்புரம்: விழுப்புரம் மாந்தோப்பு தெருவைச் சேர்ந்தவர் ஷேக்காதர் அலி. இவருக்கு சொந்தமாக சலாமேடு பகுதியில் உள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு வீட்டுவசதி வாரியம் சார்பில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்டது. சதுர அடி ரூ.2 வீதம் கணக்கிட்டு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. இதுபோதாது என்று ஷேக்காதர் அலி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் சதுர அடிக்கு ரூ.16 கணக்கிட்டு வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டும் இழப்பீட்டு தொகையை வீட்டுவசதி வாரியம் வழங்கவில்லை. இதையடுத்து விழுப்புரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் கட்டளையை நிறைவேற்று மனுதாக்கல் செய்தார்.