உக்ரைனுக்கு F-16 வகை போர் விமானங்களை அனுப்ப மாட்டோம்: அமெரிக்க அதிபர் ஜோ-பைடன் உறுதி

வாஷிங்டன்: உக்ரைனுக்கு F-16 வகை போர் விமானங்களை அனுப்ப மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ-பைடன் அறிவித்துள்ளார், நேட்டோவில் இணையும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. ராணுவ நடவடிக்கை பெயரிலான இந்த படையெடுப்பு 11 மாதங்களாக தொடர்ந்து நீடித்து வருகிறது.

உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆயுத, நிதி உதவிகள் சார்ந்த ஆதரவு கிடைத்து வருகிறது. மறுபுறம் ரஷ்யாவை பலவீனமடைய செய்யும் பொருளாதார தடைகள் உள்ளிட்டவையும் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த போரால், வளர்ந்து வரும் நாடுகளின் மக்கள் அதிகம் பாதிப்படைந்து உள்ளனர். எரிபொருள் விலை உயர்வு, உணவு பொருட்கள் பற்றாக்குறை போன்ற தாக்கங்கள் நீடித்து வருகின்றன. இருப்பினும் இரு நாடுகளும் சண்டையை கைவிடாமல் உள்ளன.

இந்நிலையில், கிழக்கு டோனெட்ஸ்க் பகுதியில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ள எங்களுக்கு புதிய ஆயுதங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை கொண்டு விரைவாக ரஷ்ய படைகளின் தாக்குதலை முறியடிக்க முடியும் என அமெரிக்க உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை வைத்துள்ளார்.

இதனை அடுத்து உக்ரைனுக்கு F -16 பைட்டர் போர் விமானத்தை அமெரிக்கா அனுப்பாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். ரஷ்யாவை எதிர்க்க போர் விமானங்கள் தேவை என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கேட்ட நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மறுப்பு தெரிவித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: