புதுடெல்லி: நிலக்கரி வரிவிதிப்பில் உள்ள முறைகேடு தொடர்பாக சட்டீஸ்கா் முதல்வரின் துணை செயலாளர் சவுமியா, நிலக்கரி வியாபாரி திவாரியின் ரூ.17.48 கோடி பினாமி சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் நிலக்கரி வரிவிதிப்பில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான விசாரணையில் மூத்த அதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் இடைத்தரகர்கள் அடங்கிய பெரிய குழுவினர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் சட்டீஸ்கர் முதல்வரின் துணை செயலாளர் சவுமியா, நிலக்கரி வியாபாரி சூர்யகாந்த் திவாரி உள்ளிட்ட 9 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.