காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில்,‘வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் போன்ற பிரச்சனைகளில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாட்டை ஒருங்கிணைக்க முடியும் என்பதை ராகுல் காந்தி நிரூபித்துள்ளார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ், பாஜ ஆகியவை நாட்டில் ஏழை-பணக்காரர் பிரிவினையை விரிவுபடுத்தும் கொள்கையை பின்பற்றுகின்றன. மோடி , ஆர்எஸ்எஸ், பாஜ ஆகியவை ஏழை மக்களை ஏழைகளாகவும், பணக்காரர்களை, பணக்காரர்களாகவும் மாற்ற விரும்புகின்றன. பத்து சதவீத மக்கள் நாட்டின் 72 சதவீத செல்வத்தை சூறையாடுகிறார்கள். 50 சதவீதம் பேர் வெறும் 3 சதவீதத்தை மட்டுமே வைத்திருக்கிறார்கள்’ என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி ராஜா பேசும்போது,’ நாட்டில் உள்ள அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். நாட்டின் சுதந்திரத்திற்காக அனைவரும் ஒன்று கூடி போராடி ஆங்கிலேயர் பிடியில் இருந்து நாட்டை விடுவித்தோம். இன்று அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஒன்று கூடி பா.ஜ ஆட்சியில் இருந்து நாட்டை மீட்க வேண்டும்’ என்றார். ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா பேசுகையில், ‘நாட்டின் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி மற்றொரு யாத்திரை ராகுல்காந்தி மேற்கொள்ள வேண்டும்.