சென்னை: கேரள கோயிலுக்குள் நடிகை அமலா பாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் நேற்று பழனி கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். சமீபத்தில் பிரசித்தி பெற்ற கேரளா திருவைராணி குளம் மகாதேவர் கோயிலுக்கு அமலா பால் சென்றார். அவர் கிறிஸ்தவர் என்பதால் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து வெளியில் நின்றபடி சாமி கும்பிட்டுவிட்டு அவர் அங்கிருந்து வெளியேறினார். இது பற்றி தனது சமூக வலைத்தளத்தில் கூறும்போது, ‘சாமி தரிசனம் செய்ய ஆர்வத்துடன் வந்தேன். ஆனால் என்னை தடுத்து நிறுத்திவிட்டார்கள். உள்ளே செல்ல தடை விதித்தார்கள்.