சென்னை: தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு 1,000 ரூபாயை 4 லட்சத்து 40,000 பேர் வாங்கவில்லை என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை ரூ.1000, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ஒதுக்கி அந்தந்த ரேஷன் கடைக்கு அனுப்பப்பட்டது. பொங்கல் பரிசு ரூ.1000ஐ பெரும்பாலான மக்கள் வாங்கினாலும், ஒருசிலர் பணம் வேண்டாம் என்று இருந்துவிட்டனர். வடசென்னையில் 10,18,728 அட்டைதாரர்கள், தென்சென்னையில் 10,39,552 குடும்ப அட்டைகளுக்கும் தலா ரூ.1000 ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.