திண்டுக்கல் : திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள வெள்ளோடு, சிறுநாயகன்பட்டி, கள்ளிப்பட்டி, உலகம்பட்டி, மறவபட்டி, கலிக்கம்பட்டி, பெருமாள் கோவில்பட்டி, சின்னாளபட்டி, செம்பட்டி, சிலுவத்தூர், அதிகாரிப்பட்டி உட்பட பல ஊர்களில் விவசாயிகள் பூக்கள் சாகுபடி செய்கின்றனர். குறிப்பாக முகூர்த்த நாட்களை வைத்து மலர் சாகுபடியை விவசாயிகள் திட்டமிடுகின்றனர். மேலும் மல்லி, செண்டுமல்லி, செவ்வந்தியுடன் கோழிக் கொண்டையும் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. கோழிக்கொண்டை மலர்கள் மூன்று மாதத்தில் அறுவடை செய்யப்படும் குறுகிய கால பயிர் என்பதால் ஓரளவு தண்ணீர் வசதி உள்ள விவசாயிகள் சாகுபடிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.