கொடைக்கானல்: பகலில் ‘சுள்’ வெயிலும், இரவில் ‘ஜில்’ கடுங்குளிரும் நிலவுவதால், அதனை ரசிக்க சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் குவிந்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில், மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரிப்பது வழக்கம். தற்போது, குடியரசு தின தொடர் விடுமுறையை முன்னிட்டு நேற்று கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.