திருவொற்றியூர்: எர்ணாவூர் கன்னிலால் லே அவுட் பகுதியை சேர்ந்த ரயில்வே ஊழியர் ராஜேஷ் (50), நேற்று முன்தினம் எர்ணாவூர் மேம்பாலத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த 2 பேர், ராஜேஷ் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றனர். மாதவரம் தபால் பெட்டி தெருவை சேர்ந்த இன்ஜினியர் சமியுல்லா (49), வடசென்னை அனல் மின் நிலையத்தில் வேலை செய்து வருகிறார். இவர், பணி முடிந்து எர்ணாவூர் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த 2 பேர், சமியுல்லா செல்போனை பறித்து சென்றனர்.