புதுக்கோட்டை: இருக்கை ஒதுக்கப்படாத காரணத்தால் குடியரசு தினவிழாவில் இருந்து எம்பி புறக்கணித்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தினவிழா இன்று காலை கொண்டாடப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துவந்தது. இந்த விழாவில் பங்கேற்கும் முக்கிய பிரமுகர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்படும். இதன்படி முக்கிய பிரமுகர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தது.