சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐ சாவு

சிதம்பரம்: சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐ நேற்று அதிகாலை திடீரென சுருண்டு விழுந்து இறந்தார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மணலூர் முருகப்பிரியா நகரில் வசித்து வந்தவர் மகேந்திரன் (59). இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. 1986ல் காவல்துறையில் பணியில் சேர்ந்த இவர் பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், கிள்ளை உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வந்துள்ளார்.

சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் கடந்த ஆறு மாதங்களாக சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் நகர காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது இரவு ரோந்து பணியை முடித்துவிட்டு நேற்று அதிகாலை 3 மணிக்கு மேல் காவல் நிலையத்துக்கு வந்தவர், திடீரென சுருண்டு விழுந்தார். உடனடியாக மற்ற காவலர்கள் அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது மறைவு குடும்பத்தினர் மற்றும் காவல்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: