இடைத்தேர்தலில் போட்டி குறித்து சமக தலைவர் சரத்குமார் ஆலோசனை

சென்னை: சமக தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சமக மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமை அலுவலகமான பாரதியார் அரங்கில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், சமக நிலைப்பாடு குறித்து நடைபெற்ற இந்த மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளின் கருத்து கேட்கப்பட்டிருக்கிறது.

அதன் அடிப்படையில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான சமத்துவ மக்கள் கட்சியின் முடிவானது நாளை(இன்று) அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: