மன வருத்தத்தில் இருந்தேனா? காங்கிரஸ் மாவட்ட தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி

ஈரோடு: ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் நேற்று அளித்த பேட்டியில், ‘பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, எப்போதுமே எதையும் முழுதாக புரிந்து கொள்ளாமல் அரைவேக்காடு தனமாக கூறுவார். அதைபோலத்தான், ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன், ஈரோட்டில் மாவட்ட தலைவரின் ஆதரவு அவருக்கு இல்லை எனவும், அந்த மாவட்ட தலைவர் மன வருத்தத்தில் இருக்கிறார் எனவும் கூறியிருக்கிறார். நான் ஜனநாயக முறைப்படிதான் போட்டியிட வாய்ப்பு கேட்டேன். காங்கிரஸ் கட்சிக்கு நான் எப்போதும் துரோகம் செய்ய மாட்டேன். இந்த இடைத்தேர்தலில் கை சின்னம் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். இதற்கு எனது ஒத்துழைப்பும், எனது தெற்கு மாவட்ட ஒத்துழைப்பும் இருக்கும். இன்று முதல் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுடன் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட உள்ளேன்’ என்றார்.

Related Stories: